 |
நம் பெண்கள் - நாட்டுக்கு, சமூகத்திற்குப் பயன்படாமல் அலங்காரப் பொம்மைகளானதற்கு, ஆண்கள் கண்களுக்கு விருந்தானதற்குக் காரணம் இந்தப் பாழாய்ப்போன ஒழுக்கமற்ற சினிமாப் படங்களும், சினிமா நட்சத்திரங்களைப் பார்த்து தினம் ஒரு ஃபேஷன் நகை, துணி, கட்டு, வெட்டு, சாயல் ஏற்பட்டதும் தான் என்பேன். அந்தப் பெண்கள் தன்மை என்ன? ஒழுக்கம் என்ன? என்பது எல்லாவற்றையும் நம் குலப்பெண்கள் என்பவர்கள் கருதாமல், புகழ், வீரம், பொது நலத் தொண்டு முதலியவற்றில் கீர்த்தி பெற்ற ஆண்களைப் போல், தாங்களும் ஆக வேண்டும் என்றில்லாமல், இப்படி அலங்கரித்துக் கொண்டு திரிவது பெண்கள் சமுதாயத்தின் கீழ்ப்போக்குத்தான் பயன்படும் என்று வருந்துகிறேன்.
* தோழர் பெரியார்
|
 |