Tamizachi : : தமிழச்சி
home l முகப்பு


MAR
09
2010

வாசகர் கடிதங்கள்..,

Name : சோலை மாரியப்பன்
e-mail : solaithamizh@gmail.com
message :

காவிககளைப் பார்த்தால்
கவனம் தேவை
நிச்சயமாய் அது
கழிசடையாய் இருக்கும்,

காவிகளின் எண்ணத்தில்
பச்சை பச்சையாய்,,,
நீலப்படங்களின் உறைவிடமாய்,,,

பிரேமானந்தா,,,
செயேந்திரா,,,
நித்தியானந்தா,,,
இன்னும் எத்தனையோ,,,

காவிகளில்கூட
வர்ண பேதம் உண்டு
அவாள் என்றால்
அரசும் அடக்கி வாசிக்கும்
ஊடகங்கள் ஊமையாய் பேசும்
மற்றவரென்றால்
ஊதிப்பெரிதாக்கும்,

செயேந்திரன்,,,
சொர்ணமால்யா,,,
சுசீலா,,,
காம லீலைகள்,,,
மறைக்கப்பட்டன
கொலை வழக்குமட்டும்
பெரிதாக்கி,,,,
அதுவும் புசுவாணமாக்கி,,,

நித்தியானந்தா
மடங்கள் சூறை,,,
படங்கள் கிழிபட்டன,,,
சிலைகள் உடைபட்டன,,,
செய்தது இந்து அமைப்புகள்,

காஞ்சிபுரம் கருவறையில்
தேவநாதன் காமலீலைகள்
உல்லாச சல்லாபம்,,,
இந்து அமைப்புகள்
எங்கே ஒளி(ழி)ந்தன,

புனிதங்கள் அவாளுக்கு
சிதம்பர நந்திகள்
விலகி வழிகாட்டும்,,,
மற்றவருக்கோ,,,
சிதையேறி மீண்டும்
புனிதராய் வரவேண்டும்,,,
சிதையில் சிதைந்தாலோ,,,
சிறையிலேயே வாழ்க்கை
பிரேமானந்தாவைப்போல்,,,

~~~

வணக்கம் தோழர் நலமா?

சிற்பி வீட்டில் சந்தித்தது. இப்பொழுதுதான் மீண்டும் நலம் விசாரிக்கும் வாய்ப்பு. வெறும் கவிதை மட்டும் தானா? இருப்பினும் கவிதை நன்றாக இருக்கிறது.

தோழமையுடன்
தமிழச்சி

2

Name : Rk.Guru
e-mail : rkguru3@gmail.com

message : வணக்கம் தோழியே…!

உங்களுடைய இணைய பதிவு \\\"பெண் ஏன் இப்படியானாள்? படித்தேன். நல்ல அனல் தெரியும் வார்த்தைகள். மிகவும் புரட்சி சிந்தனைகளை  முன்னெடுத்து செல்வது போற்றுதலுக்குரியது, பாராட்ட வேண்டியது.

உங்களை யாரும் பாராட்டவும் வேண்டாம், போற்றவும் வேண்டாம். \\\"பெண்ணே ஏன் இப்படி இறுக்க\\\"  நான் எப்படி இருக்கேன் பார்.\\\" நீ மட்டும் ஏன் இப்படி\\\" வா என்னுடன் இணைந்து போராடுவோம். என்று சொல்ல உங்களை ஏன் பாராட்ட வேண்டும்.

பாராட்டும், புகழும் கொண்டையிலே குத்தும் குத்துஊசிக்கு சமம். என்று \\\"உங்களுக்கே தெரியுமே\\\"  சமுதாய பெண்களின் மற்றும் ஆண்களின் பழமை எண்ணங்களை மாற்ற முயற்சிக்க உங்கள் கையில் உள்ள சவுக்கை இன்னும் வேகமாக சுழற்றுங்கள் உங்கள் கரங்களை வலுபடுத்த நாங்கள் உள்ளோம்.

நான் புதியதாக வலைபூ பக்கத்தை உருவாக்கி உள்ளேன். உங்கள் பணிகளுக்கிடையே  சிறுது நேரம் இருந்தால் அவற்றை பாருங்கள்…
http://rkguru.blogspot.com/

நட்புடன் உங்கள் தோழன்.

3

Name : seyed buhari
e-mail : hameedha14@yahoo.com

message : அன்புள்ள சகோதிரி தமிழச்சிக்கு,நீங்கள் அழைக்கும் பகுத்தறிவின் துனைவுடன் தான் உங்களை இஸ்லாம் நோக்கி அழைக்கிறேன்.அழிவுக்கு என்னை ஆட்படுத்திக்கொள்ள விரும்பாத நான் எப்படி உங்களை அழைப்பேன். தனக்கு விரும்புவதையே பிறர்க்கும் விரும்பாத வரை ஒருவன் இறைநம்பிக்கைவுடையவனாய் ஆகமாட்டான் என்ற நபியின் போதனைப்படி வாழ்பவன் நான். ஆதலால் தான் இஸ்லாம் குறித்து படிக்க அழைக்கிறேன். பர்தாவை விமர்சிக்க இஸ்லாத்தில் தடையில்லை.இஸ்லாம் கொச்சைப்படுத்துவதை தான் எதிர்க்கிறது. தஸ்லிமாவும், ருஷ்தியும் இஸ்லாத்தின் விமர்சகர்கள் அல்ல, பிறர்க்காக கொச்சைப்படுத்தியவர்கள். பர்தாவை எரிக்கலாம்,ஆனால் எரிப்பவர்களிடம் இஸ்லாம் எதிர்ப்பார்ப்பது அறிவுப்பூர்வமான காரணம். பகுத்தறிவுக்கு ஏற்ப்புடைய அனுபவங்கள் கற்று தந்த ஒழுக்க விதிமுறைகளுக்கேற்ப எரிப்போரை அரவணைத்து ஆரத்தழுவ தயார்.நான் யார்க்கும் அடிமை இல்லை நல்ல சொற்பதம், எனினும் எதார்த்தத்தை மீறிய கற்பனை. மனிதன் தன் சொல் செயல் சிந்தனை ந்ட்பு அறிவு சுற்றம் சூழல் நடவடிக்கை என நீண்டதோர் பட்டியலில் தன்னிச்சை தொடங்கி அற்பம் வரை அடிமை பட்டுக்கிடக்கிறான். இதை நீங்கள் மறுக்களாம், எனினும் உண்மை உண்மை தான்.ஆதலால்   இஸ்லாத்தை ஏற்க அல்ல........

விமர்சிக்கும் நல்லதோர் விமர்சகராய் அழைக்கிறேன்.

4

Name : Nandhivarman
e-mail : dravidaperavai@gmail.com

message : I cannot find suitable word in the lexican to record my appreciation of the work you are doing to propagate Periyarism.

I shall send you by mail many pdf files that would be of common interest, if i have your email Id

www.dravidaperavai.org.in

5

Name : Fathima
e-mail : fsha_d@yahoo.com

message : முஸ்லிம்களை வைத்து இஸ்லாத்தை எடை போடாதீர்கள்.

நன்றி
பாத்திமா.

6

மதிப்பிற்குரிய tamizachi.com ஆசிரியர் அவர்களுக்கு
 
முதலில் எனது பணிவான வணக்கம்!
 
பொருள்: நிலப் பகுதிகள் உயர்வதால் நில அதிர்ச்சி ஏற்படுகிறது. படக் காட்சி சமர்ப்பித்தல்.

கலைஞர் தொலைக்காட்சியில் 25.05.2009,அன்று ஒளிபரப்பான சந்தித்த வேளையில் நிகழ்ச்சியில் திரு. ரமேஷ் பிரபா அவர்களின் நேர்காணல் படப் பதிவையும் தங்களின் மேலான பார்வைக்கு அனுப்புகிறேன்.

http://www.youtube.com/watch?v=7swH78CqSWI
http://www.youtube.com/watch?v=vUKVsZHQOFg
http://www.youtube.com/watch?v=CctDzG65STU
http://www.youtube.com/watch?v=RvtfB23LbEQ
http://www.youtube.com/watch?v=CWnq9a39owo

ராஜ் தொலைக்காட்சியில் 01.11.2009, அன்று நேரடியாக ஒளிபரப்பான மக்கள் மேடை நிகழ்ச்சியில்  நில அதிர்ச்சி குறித்து நேயர்களின் கேள்விகளுக்கும், ஊடகவியலாளர் திரு முருகானந்தன் அவர்களின் கேள்விகளுக்கும் நான் விளக்கமளித்தேன்.
 
அந்த நேரடி ஒலிபரப்புக் காட்சியின் படப் பதிவையும் தங்களின் மேலான பார்வைக்கு அனுப்புகிறேன்.

http://www.youtube.com/watch?v=Yz62LfFP3AA

http://www.youtube.com/watch?v=Xtw34GL80Lw
http://www.youtube.com/watch?v=vb9G-0Aa4RE
http://www.youtube.com/watch?v=U8dOW1pzF1g
http://www.youtube.com/watch?v=jmA_BN2-92o

அன்புடன்,
விஞ்ஞானி. க.பொன்முடி


 

 

 72 

 

 73 

 

 74 

 

 75 

 

 76 

 

 77 

 

 78