Tamizachi : : தமிழச்சி
home l முகப்பு


SEP
07
2010

மாப்லியை கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

பிரெஞ்ச் சிந்தனையாளர் ´ருசோ´ (Rousseau) தன் சிந்தனைகளை வெளிப்படுத்தும் போதெல்லாம் எதிர்வாதம் அதிகமாக வைக்கும் மாற்றுக் கருத்தாளர் ´மாப்லி´ (Mably, 1709 - 1785)

மனிதன் என்பவன் சுதந்திரப் பிறவி. ஆனால் இன்று எங்கு பார்த்தாலும் விலங்குகளால் பிணைக்கப்பட்டிருப்பதையே காண்கிறோம்" என்கின்ற ருசோவின் தத்துவத்தை பல சிந்தனையாளர்கள் சிறந்த தத்துவமாக தூக்கி பிடிக்கும் போது மாப்லி (ப்ரெஞ்ச் சிந்தனையாளர்) எதிர்வாதம் வேறு கோணத்திற்கு எடுத்துக்காட்டியது.

´சமத்துவம்´ என்பது நியாயமான கோரிக்கைதான். ஆனால் மனிதனுக்கு மனிதன் புத்திக்கூர்மை, ஊக்கம், செயல்திறன், பகுப்பாய்வு போன்ற சமாச்சாரங்கள் எல்லோருக்குள்ளும் சமமாகவா இருக்கின்றது என்பதன் அடிப்படையில் மாப்லியின் தத்துவ விளக்கம் செல்கிறது....

"இயற்கை மனிதர்கள் அனைவரையும் எல்லாவிதங்களிலும் சமத்துவத்துடனே படைத்திருக்கிறது சிலதை தவீர. பின்னாலில் மனிதர்களுக்குள் முரண்பாடுகளும், வேற்றுமைகளும் உருவாக கல்வி காரணங்களாகின.

எல்லோருக்கும் கல்வியும், பயிற்சியும் சமமாக பகிர்ந்தளிக்கப்படவில்லை. கல்வி கிடைக்காத மனிதர்களை தாழ்ந்த நிலைக்கு சமூகம் வைத்திருக்கிறது. அதன் தாக்கம் அம்மனிதர்களுக்குள் தாழ்வுமனப்பான்மையை ஏற்படுகிறது. பொருளாதாரத்திலும் பின்தங்கி இருக்க வேண்டிய சார்புநிலையை சமூகம் ஏற்படுத்தி விடுகிறது.

தகுதிக்கு ஏற்ற கல்வி வாய்ப்புகளில் சக மனிதர்கள் தரம் பிரிக்கப்பட்டு ஒடுக்கப்படுகிறார்கள்.

பொதுவாகவே, மனிதர்கள் கௌரவம், புகழ் அங்கீகாரத்துக்கு ஆசைப்படுபவர்கள். நல்ல வாய்ப்புகள் கிடைக்கும் பொழுதெல்லாம் மனிதர்கள் அதை உபயோகித்துக் கொள்ளவே விரும்புவார்கள்.
ஆனால், கல்வித் தகுதியின் பேரால் எல்லா வாய்ப்புகளுமே முற்றாக மறுக்கப்படும் மனிதர்கள் என்ன செய்வார்கள்? அவர்கள் அதிருப்தியை எப்படி வெளிப்படுத்துவார்கள்? அவர்களுக்கு உரிமைகளும், சலுகைகளும், அங்கீகாரங்களும் சமுகத்தில் கிடைக்காத போது மிருகநிலைக்குத்தானே செல்வான்?

சக மனிதர்கள் என்ன செய்திருக்க வேண்டும்?

எல்லா மனிதர்களுக்கும் கல்வி வாய்ப்பு அளித்திருக்கிறார்களா? எல்லா மனிதர்களும் தங்களுக்குள் வேற்றுமையை ஏற்படுத்தி மிகைப்படுத்தி காட்டுவதைத்தானே விரும்புகிறார்கள்?"

ஆகவே, ருசோ சொல்வதுபோல் சுதந்திர மனிதன் இன்று சுதந்திர மனிதனாக இல்லாமல் போனதற்கு முதற்காரணம் இந்த பாழாய் போன கல்வி அனைவருக்கும் சமமாக பகிர்ந்தளிக்கப்படாததால்தான் ஏகப்பட்ட சங்கதிக்களுக்குள் மாட்டிக் கொண்டு தவிக்கின்றான் என்று மாப்லி சொல்கிறார்.

நியாயம் தானே?

மேலும் மாப்பி சிந்தனைகளை வாசிக்க : http://bit.ly/9V4iwq

தமிழச்சி
07.09.2010




 1 

 

 2 

 

 3 

 

 4 

 

 5